கடலூர் சிப்காட் தீ விபத்து…! பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் சி.வெ.கணேசன்…!

Published by
லீனா

தீ விபத்து குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். 

கடலூர் சிப்காட் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெண்கள் உட்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த தீ விபத்து குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்றும், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago