நாகை – இலங்கை இடையேயான பயண கப்பல் சேவை நிறுத்தம்.! ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்.!

Published by
மணிகண்டன்

நாகப்பட்டினம் முதல் இலங்கையில் உள்ள காங்கேசன் வரையில் கடல்வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் சுற்றுலா கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சுற்றுலா போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவங்கி வைத்து வாழ்த்தினார்.

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் எல்லாம் நேரில் வந்து இந்த பயணிகள் சுற்றுலா கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தனர். 150 பேர் பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் இந்த கப்பலில் முதல் நாளே 50 பேர் தான் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாவலூர் சுங்க சாவடியில் நாளை முதல் கட்டணமில்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு, 12 மணிக்கு இலங்கை செல்லும் எனவும், பகல் 1.30 மணிக்கு இலங்கை காங்கேசனில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு நாகை வந்தடையும். இந்த சேவை தினந்தோறும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கடுத்தடுத்த நாட்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக திங்கள், புதன் வெள்ளி கிழமை மட்டுமே பயண சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இதன் பயண கட்டணம் தான் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாகை – இலங்கை பயண கட்டணம் முதல் நாளை தவிர மற்ற நாட்களில் 7,670 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தான் நாளை மறுநாள் முதல் இலங்கை – நாகை கப்பல் பயண சேவை நிறுத்தப்படுவதாகவும், மீண்டும் ஜனவரியில் இந்த சேவை தொடங்கும் எனவும் சுற்றுலாத்துறையினர் அறிவித்தனர். இதனால் இலங்கையில் சுற்றுலா சென்றுள்ள பயணிகள் நாடு திரும்ப உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

RCB vs GT : இந்த முறை ‘கிங்’ ஆட்டம் மிஸ் ஆயிடுச்சி., குஜராத் சூழலில் வீழ்ந்த விராட் கோலி!

பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…

19 minutes ago

இங்க நான் தான் கிங்.! எலான் மஸ்க் முதலிடம்! டாப் 5 உலக பணக்காரர் லிஸ்ட் இதோ..

ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…

1 hour ago

”சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே” மீண்டும் கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.!

பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…

2 hours ago

“வக்பு சொத்துகளை மத்திய அரசு அபகரிக்க நினைக்கிறது!” ஆ.ராசா கடும் தாக்கு!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…

2 hours ago

வக்பு வாரிய திருத்த சட்டம் : பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago

“டெல்லி நாடாளுமன்றமே வக்பு சொத்தா மாறியிருக்கும்” மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு வாரிய திருத்த சட்டத்தை மக்களவையில் மத்திய சிறுபான்மை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை…

3 hours ago