நாகை – இலங்கை இடையேயான பயண கப்பல் சேவை நிறுத்தம்.! ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்.!

Published by
மணிகண்டன்

நாகப்பட்டினம் முதல் இலங்கையில் உள்ள காங்கேசன் வரையில் கடல்வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் சுற்றுலா கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சுற்றுலா போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவங்கி வைத்து வாழ்த்தினார்.

மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் எல்லாம் நேரில் வந்து இந்த பயணிகள் சுற்றுலா கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தனர். 150 பேர் பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் இந்த கப்பலில் முதல் நாளே 50 பேர் தான் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாவலூர் சுங்க சாவடியில் நாளை முதல் கட்டணமில்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு, 12 மணிக்கு இலங்கை செல்லும் எனவும், பகல் 1.30 மணிக்கு இலங்கை காங்கேசனில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு நாகை வந்தடையும். இந்த சேவை தினந்தோறும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கடுத்தடுத்த நாட்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக திங்கள், புதன் வெள்ளி கிழமை மட்டுமே பயண சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இதன் பயண கட்டணம் தான் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாகை – இலங்கை பயண கட்டணம் முதல் நாளை தவிர மற்ற நாட்களில் 7,670 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தான் நாளை மறுநாள் முதல் இலங்கை – நாகை கப்பல் பயண சேவை நிறுத்தப்படுவதாகவும், மீண்டும் ஜனவரியில் இந்த சேவை தொடங்கும் எனவும் சுற்றுலாத்துறையினர் அறிவித்தனர். இதனால் இலங்கையில் சுற்றுலா சென்றுள்ள பயணிகள் நாடு திரும்ப உள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

2 hours ago

TNPSC குரூப் 4 தேர்வு நாள் அறிவிப்பு! எப்போது தேர்வு.? எத்தனை பணியிடங்கள்.?

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …

2 hours ago

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.., பதிலடி கொடுக்கும் இந்தியா.!

காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…

3 hours ago

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

13 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

14 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

16 hours ago