பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறித்த புகார்களையும், தகவல்களையும் கூற பிரத்யேக முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்கை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல நடந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்த பிரிவுக்கான அலுவலகம் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுடன் இணைந்து சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை குறித்த புகார்களையும், ஆலோசனைகளையும், அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய விழிப்புணர்வு உள்ளிட்ட தகவல்களை கூறுவதற்கு குற்றத்தடுப்பு பிரிவினரை எளிதில் தொடர்பு கொள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கென தனி முகநூல் கணக்கு(Greater Chennai Police – crime against women) மற்றும் ட்விட்டர் கணக்கை உருவாக்கியுள்ளனர். இதனை நேற்று சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை ஆணையர் ஜெயலட்சுமி உட்பட பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …