திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த மண்பாண்ட தொழிலாளர்கள்…!!!

Default Image
  • தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு.
  • திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்கம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மக்கள் தேசிய கட்சியின் தலைவர் சேம.நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்தார். மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் நாட்டை சீரழித்து விட்டன. மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகின்றன என்றும், இவர்கள் ஆட்சியால் யாருக்கும் பயன் இல்லை.

மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகள் உள்ளன என்றும், வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு  செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்