தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும்.
அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பலரும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘ ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடு பணத்தை இழப்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தான். மக்கள் நலன் சார்ந்த சட்டங்களை நிறைவேற்றாமல் போட்டி அரசாங்கத்தை தமிழக ஆளுநர் நடத்துகிறார். ‘ என தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். .
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…