ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சிபிஐ இன்று ஆர்ப்பாட்டம்.!
ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை 10மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிட போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் எனவும், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தங்குவார் எனவும் முத்தரசன் அறிவித்துள்ளார்.