துப்பாக்கி சூடு…!சிபிஐ தமிழக போலீசார் , வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு…!

Published by
Venu

சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே, 22ல், தூத்துக்குடி ஆட்சிய‌ர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஊர்வலமாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். ஏராளமான பொதுமக்களும் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக, தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம் மற்றும் முத்தையாபுரம் காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழக அரசு, துப்பாக்கிச் சூடு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்ற கிளை கடந்த ஆக.14ல் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை, சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 20 அமைப்புகள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.

இந்நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரப்பட்டது.இந்நிலையில் சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.பெயர் தெரியாத சிலர் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

11 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

15 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

16 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

16 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

16 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

17 hours ago