விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தை.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடந்த ஒரு வாரமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்பின் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது தொகுதி ஒதுக்கீடு இழுபறியில் இருந்ததால் பட்டியல் நாளை வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பதை குறித்து திமுக – சிபிஐ பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் சில விருப்பமான தொகுதிகளை கேட்டுசிபிஐ குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திருத்துறைப்பூண்டி, தளி போன்ற விருப்பமான தொகுதிகள் கிடைக்காத நிலையில், ஒரே நாளில் 2வது முறையாக திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் சுலபமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…