தமிழகத்திலும் கொவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவில் பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன் போன்ற முக்கிய கோயில்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, கோயில்களுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கருவறை, சன்னதி மற்றும் கோயில் வளாகங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து கோயில்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயில் ஊழியர்கள் சார்பில் மருந்து தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…