கொவைட்-19 விவகாரம்… இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… நேற்றே வாங்கி இருப்பு வைத்த குடிமகன்கள்…

Default Image

கொவைட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்குக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். பாரத பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு தற்போது  உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நேற்று பிற்பகலிலேயே வெளியானது. இதனால் மதுபிரியர்கள் நேற்று இரவு வரை  டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். பெரும்பாலான கடைகளில் இரவு நேரங்களில் கூட்டம் அலைமோதியது. இன்றைய தினத்துக்கு தேவையான மதுபானங்களை குடிமகன்கள் வாங்கி இருப்பு வைத்தனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்