30 கிமீ வேகத்தை தாண்டினால் ரயில் சேவை ரத்து.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Default Image

இரவு நேரத்தில் கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் 30 கிமீ வேகத்திற்கு மிகாமல் ரயிலை இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில்வே வழித்தடத்தில் யானைகள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று வருகையில், கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரத்தில் ரயிலை 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.

30 கிமீ வேகத்தை தாண்டி ரயிலை இயக்கினால், கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்ய நேரிடும் என தென்னக ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்