ஐகோர்ட் உத்தரவு… தேவரின் தங்கக் கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன்!

Published by
பாலா கலியமூர்த்தி

மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன். இதன்பின், தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். சமீபத்தில், அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் உருவ சிலைக்கு அணிவிக்க அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்க கவசம் வழங்கினார். ஒவ்வொரு வருடமும் குருபூஜையையொட்டி சில நாட்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்ட பிறகு, மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் உள்ள லாக்கரில் தேவரின் தங்க கவசம் பாதுகாக்கப்படும். அதிமுக பொருளாளர் மற்றும் நினைவிட பொறுப்பாளர் கையெழுத்திட்டு தங்க கவசம் மீண்டும் பெறப்படும் என தெரிவித்திருந்தார்.

மேலும், அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்தாண்டு அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இதனால் தங்கக் கவசத்திற்கு அவர் உரிமை கோர முடியாது. இதனால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரச்சினை எழுந்தபோது ராமநாதபுரம் வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் பட்டியலுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

எனவே, நடப்பாண்டு தேவர் குருபூஜை விழாவின்போது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல் சீனிவாசன் கோரியிருந்தார். இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை வங்கி லாக்கரிலிருந்து அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

ஏற்கெனவே அ.தி.மு.க.வின் சொந்த பொறுப்பில் தங்க கவசம் உள்ளது. அதன்படி அக்கட்சியின் பொருளாளர் சீனிவாசனிடம் தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வங்கிக்கு ஆணையிடப்பட்டது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின், தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ரூ.3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் அதிமுக தங்க கவசம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

43 minutes ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

9 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

9 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

11 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

12 hours ago