#BREAKING: ஸ்பா, மசாஜ் சென்டரில் சிசிடிவி பொருத்த நீதிமன்றம் அறிவுறுத்தல் ..!

Default Image

தமிழகத்தில் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சட்ட ரீதியான செயல்பாட்டில்  காவல்துறை தலையிடுவதாகவும், இதில் காவல்துறை தலையிடக்கூடாது என உத்தரவிட வேண்டும் என கிரிஜா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது சட்ட விரோதமானது.

காவல்துறை நடவடிக்கையை தடுப்பது  குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாகும், ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும்,  தமிழகத்தில் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்