Senthil Balaji Court custody again extended [file image]
Senthil balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் 32-ஆவது முறையாக நீடித்து நீதிமன்றம் உத்தரவு.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதன்பின் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தாக்கல் மனுக்களை சென்னை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்த நிலையில், அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே, இவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 32-ஆவது முறையாக மீண்டும் நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஏப்ரல் 17 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
அதேசமயம் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய மனு மீது, மீண்டும் வாதங்களை முன் வைக்க அனுமதி கேட்டு செந்தில்பாலாஜி தொடர்ந்த மனு மீது ஏப்ரல் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…