அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் 17-வது முறையாக நீட்டிப்பு ..!

Published by
அகில் R

சட்டவிரோத குற்றமான, பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது செய்தனர்.  120 பக்க குற்றப் பத்திரிகையும்,  3,000 பக்க ஆவணங்களையும் அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி தாக்கல் செய்தனர்.

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்யப்பட்டது.  தற்போது செந்தில் பாலாஜி  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி தேதி 16-வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 29-ம் தேதி (அதாவது இன்று ) வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாஜகவுக்காக ரஜினி, கமலிடம் ஆதரவு கேட்போம்.! வானதி சீனிவாசன் பேட்டி.!

இதைத்தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், இன்று புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற ஜனவரி 31 ம் தேதி அதாவது நாளை மறுநாள் ( புதன்கிழமை ) வரை நீடித்துள்ளது.

இதனால் செந்தில் பாலாஜியின் நீதி மன்ற காவல் 17-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 3-வது முறையாக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை 3-வது முறையாக சென்னை முதன்மை  நீதிமன்றம் தள்ளுபடி செய்தது  என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

12 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

13 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

13 hours ago