7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை

Published by
லீனா

7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிசந்திரன், ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.

இதனையடுத்து, 7 ஆண்டுகள், 10 ஆண்டுகள் என சிறையில் இருக்கும் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால், அரசியல் தலையீடு காரணமாக தாங்கள் விடுதலை செய்யப்படாமல் இன்னும் சிறையிலேயே இருப்பதாகவும், இவ்வாறு சிறையிலேயே இருப்பது மன உளைச்சலை ஏற்படுவதோடு, உடல் நலத்தையும் பாதிக்கிறது.

மேலும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு முன் கூட்டியே விடுதலை அளிப்பது தொடர்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டமும், மனிதநேய அடிப்படையில் வழிவகுக்கிறது. ஆனால், 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றனர். எனவே, 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தன்னை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷா பானு ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், இதே வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, இதே  கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆகவே, இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவு குறித்து ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார் என கூறப்பட்டது.

மேலும், இந்த கருத்துக்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

16 minutes ago
சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

2 hours ago
பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

3 hours ago
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

7 hours ago
குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

7 hours ago
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

9 hours ago