எவிடென்ஸ் கதிருக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிப்பு..! முதல்வர் வாழ்த்து..!

Default Image

எவிடென்ஸ் கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு. அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஐரோப்பியக் கவுன்சில் சார்பாக மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகளுக்காக , சிறந்த பணிக்காகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கான பாதுகாவலராக திகழ்ந்ததற்காகவும் மதுரை எவிடன்ஸ் கதிருக்கு ‘ரவுல் வாலன்பெர்க்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எவிடென்ஸ்’கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‘பட்டியல் – பழங்குடியின மக்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் செயற்பாட்டாளர் ‘எவிடென்ஸ்’ கதிர் (எ) ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ் அவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் ரவுல் வாலன்பெர்க் விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அவரது பணி சிறப்புறத் தொடர வாழ்த்துகிறேன்!’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்