குடிசை மாற்று வாரியம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ அன்பரசன்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக சட்டப்பேரவையில் குடிசை மாற்று வாரியம் தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, குடிசை மாற்று வாரியம் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் வெளியிட்டார்.

இதனிடையே, குடிசை மாற்று வாரியம் இனி ” தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ” என பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிசை மாற்று வாரியம் தொடர்பான புதிய அறிவிப்புகள்:

  • பழுதடைந்த 7,500 அடுக்குமாடி குடியிருப்புகள், நடப்பு நிதியாண்டில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுக்கட்டுமானம்.
  • மறுக்கட்டுமானம் செய்யும் காலத்தில் வழங்கப்படும் கருணை தொகை ரூ.8,000 லிருந்து ரூ.24,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • கட்டுமான பணிகளின் தரத்தினை ஆய்வு செய்ய ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழுக்கள் அமைக்கப்படும்.
  • அடுத்த 6 மாதத்தில் ஒரு லட்சம் வீடுகள் ஏழை, எளிய மக்களுக்கு கட்டித்தரப்படும்.
  • அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முழுத்தொகை செலுத்திய 15,000 பயனாளிகளுக்கு விற்பனை பத்திரங்கள் வழங்கப்படும்.
  • வீடு வாங்குபவர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்க தவணை முறை திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
  • அடுத்த 6 மாதத்தில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
  • கட்டுமான பணிகளில் தரத்தினை உறுதி செய்ய வல்லுநர்கள் குழு அமைக்கப்படும்.
  • புதிதாக கட்டப்படும் 2 மாடிக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மின்தூக்கி உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 min ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

40 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

45 mins ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

2 hours ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

3 hours ago