கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை காரணமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ கல்லூரிகள் தவிர்த்து அனைத்து கல்வி நிறுவனங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ள தகவலில், சென்னையில் சுமார் 3800 ஏடிஎம் மையங்களை சுத்தம் செய்ய உத்தரவிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னையில் ஒரு மருத்துவ குழு தினந்தோறும் 80 வீடுகளை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பூங்காக்கள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியை தொடர்பு கொள்ள 1913 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் சென்னையிலுள்ள 2500 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்திடம் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் சிறிய கடைகள் திறந்து இருக்கும் என்றும், மக்கள் வீட்டைவிட்டு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…