இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது … – ஈபிஎஸ் அறிக்கை!

Published by
அகில் R

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை-10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.  ஏற்கனவே இந்த இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்களை திமுக, நதாக, பாமக கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்று எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

தற்போது, விக்ரவாண்டியில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிட போவதில்லை என்றும், அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்றும் முடிவெடுத்து உள்ளனர். இது குறித்து 3 பக்க அறிக்கை ஒன்றை எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக X தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், திமுகவை சாடியும், இந்த இடைத்தேர்தலை குறித்தும் பேசி இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை குறித்து பேசியபோது, “விடியா அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

23 mins ago

“குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்”…ஆர்த்தி அம்மா எமோஷனல்!!

சென்னை : நடிகர் ஜெயம் ரவி ஆசையாகக் காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யவுள்ளதாகக்…

25 mins ago

பாப்பம்மாள் பாட்டி மறைவு: பிரதமர் மோடி முதல் முதலவர் ஸ்டாலின் வரை தலைவர்கள் இரங்கல்!

கோயம்புத்தூர் : மேட்டுப்பாளையம் அருகே பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் (108) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.…

32 mins ago

” உதயநிதியை துணை முதல்வராக்குங்கள்., நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.!” காங்கிரஸ் தலைவர் ‘பளீச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார், தமிழக அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் வரும் என்ற…

35 mins ago

வாரத்தின் இறுதி நாளில் சற்று குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ…

சென்னை : வார இறுதி நாளான இன்று சற்று இறக்கத்தில் சென்றுள்ளது தங்கம் விலை. அதன்படி, சவரனுக்கு ரூபாய் 40…

57 mins ago

லெபனான் மீது தீவிரமடையும் தாக்குதல்! போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர்!

லெபனான் : இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டிற்கு இடையேயான போர் தொடங்கி ஒரு ஆண்டு நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு…

1 hour ago