இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது … – ஈபிஎஸ் அறிக்கை!

Published by
அகில் R

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை-10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.  ஏற்கனவே இந்த இடைத்தேர்தலுக்காக வேட்பாளர்களை திமுக, நதாக, பாமக கட்சிகள் அறிவித்திருந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர் யார் என்று எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.

தற்போது, விக்ரவாண்டியில் நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிட போவதில்லை என்றும், அதிமுக இந்த தேர்தலை புறக்கணிக்கிறது என்றும் முடிவெடுத்து உள்ளனர். இது குறித்து 3 பக்க அறிக்கை ஒன்றை எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக X தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், திமுகவை சாடியும், இந்த இடைத்தேர்தலை குறித்தும் பேசி இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை குறித்து பேசியபோது, “விடியா அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

35 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

15 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

16 hours ago