அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அத்தகைய அதிக மக்களை கொண்ட ஒரு நாட்டில் நுழைந்த கொடூர கொரோனா வைரஸ் அந்நாட்டை வாட்டி வதைத்து வருகிறது.இது படிப்படியாக உலக நாடுகளிலும் பரவி வருவது தான் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.உலக சுகாதாரதுறைக்கே இந்த வைரஸ் சவால் விடும் வகையில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.இந்த வைரஸை தடுக்க நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற அதே வேளையில் சீனாவில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.அங்கு இந்நோய் பாதிப்பு மட்டும் 230 சீனர்கள் உயிரிழந்துள்ளனர்.இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்நோய் காரணமாக சீனாவும் கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா நுழைந்து விட்டது. கொரோனா அறிகுறியுடன் ஒரு சீனர் உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி திருவண்ணாமலை மற்றும் திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மருத்துவமனைகளில் இந்த அறிகுறியோடு 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் சீனர் என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…