கொல்ல துடிக்கும் கொரோனா..பள்ளிகளுக்கு விடுமுறை வழக்கு.?? உயர்நீதிமன்றம் உத்தரவு

Published by
kavitha

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதுள்ளது.

Image result for பள்ளி குழந்தைகள்

உலகம் முழுவதும் தனது கொடூரத்தால் அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய மற்றும்  மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் பின்பற்ற முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளி வரை விடுமுறை அறிவிக்கும் படி உத்தரவிடக் கோரி ராஜவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவாக  தாக்கல் செய்தார்.

மேலும் அவர் இந்த மனுவில் கொரோனா குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தான் எளிதில் தாக்குகிறது எனவே குழந்தைகளை பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அனுப்பியும் , எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் 2019-20ம் கல்வியாண்டானது முடிவடைய உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி என்று ஏதும் இல்லை  என்று கூறிய அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது அதனோடு இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிடவும் முடியாது என்று  உத்தரவிட்டனர். கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில்  பரவாமல் இருக்க தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும்  தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

Published by
kavitha

Recent Posts

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

26 minutes ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

2 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

3 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

3 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

4 hours ago

மனைவி கண்முன்னே ரவுடி வெட்டிக்கொலை! 3 பேர் மீது போலீஸ் என்கவுண்டர்!

ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…

4 hours ago