கொல்ல துடிக்கும் கொரோனா..பள்ளிகளுக்கு விடுமுறை வழக்கு.?? உயர்நீதிமன்றம் உத்தரவு

Published by
kavitha

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதுள்ளது.

Image result for பள்ளி குழந்தைகள்

உலகம் முழுவதும் தனது கொடூரத்தால் அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய மற்றும்  மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் பின்பற்ற முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளி வரை விடுமுறை அறிவிக்கும் படி உத்தரவிடக் கோரி ராஜவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவாக  தாக்கல் செய்தார்.

மேலும் அவர் இந்த மனுவில் கொரோனா குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தான் எளிதில் தாக்குகிறது எனவே குழந்தைகளை பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அனுப்பியும் , எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் 2019-20ம் கல்வியாண்டானது முடிவடைய உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி என்று ஏதும் இல்லை  என்று கூறிய அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது அதனோடு இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிடவும் முடியாது என்று  உத்தரவிட்டனர். கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில்  பரவாமல் இருக்க தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும்  தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

Published by
kavitha

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

12 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

13 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

14 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

15 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

15 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

16 hours ago