பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் சென்னையில் 10 பேர், திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டனர். இந்த கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகள், மேனிலை கல்வி, பள்ளி கல்வி, சமூக நலன் ஆகியவற்றின் செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்தினார். இதில் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சீனாவில் இருந்து வந்த 12 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில், தமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், கொரோனா வைரசை தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் தொடரும். வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தி உள்ளோம் என்றார். மேலும்,
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்தார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…