கொரோனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியாக கோவை to கேரளா செல்லும் சாலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகம், ஆந்திரா இடையிலான வாகன போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டு அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளே விடப்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு வந்ததையடுத்து நள்ளிரவு முதல் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்படி கோவை – கேரளா எல்லையில் உள்ள முள்ளி, ஆனைகட்டி, டிப்சிலிப் என 14 வழித்தடங்கள் மூடபட்டுள்ளன. மேலும் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வாளையாறு சோதனை சாவடியில் மட்டும் 100-க்கும் அதிகமான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பால், காய்கறி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது மற்ற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…