தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் பூ சந்தையும் தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மல்லிகைப்பூ செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் பூ நடவு செய்த விவசாயிகளுக்கு கடும் நட்டமடைந்துள்ளது. ஒரு சில விவசாயிகள் மலர்கள் பறிக்கப்படாததால் செடிகளை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். தற்போது குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூ உற்பத்தி நாளொன்றுக்கு 20 டன்னாக அதிகரித்துள்ளது.தற்போது மல்லிகை பூவின் விலை குறைந்த பட்சம் ஒரு கிலோ ரூ.250க்கு விற்றாலும் 20 டன் என கணக்கிட்டால் சுமார் ரூ.50 லட்சம் இழப்பு ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக மல்லிகைப்பூ மட்டுமின்றி முல்லை, காக்கடா, செண்டு, கோழிக்கொண்டை, சம்பங்கி என பல்வேறு மலர்கள் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ளதால் பல லட்சக்கணக்கான ரூபாய் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…