கொரோனா தொற்று எதிரொலி… கூவகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து…

Published by
Kaliraj

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அந்த தொற்று விரைவில் பரவிவிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்  ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே  நாடு முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உளூந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில், கூத்தாண்டவர் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில்  16 நாட்கள் தொடர்ந்து  நடைபெறும். எனவே இந்த திருவிழாவில் கலந்துகொள்ள  டில்லி, மும்பை , கோல்கட்டா, பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கூடுவார்கள். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், கூட்டமாக மக்கள் கூடக்கூடாது என்பதாலும் வரும் 21ல் இருந்து மே 6 வரை நடைபெற இருந்த கூத்தாண்டவர் திருவிழா ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, சீர்மிகு காவல்துறை  அதிகாரிகள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago