உலகம் முழுவதும் பரவி தனது ஆட்டத்தை காட்டிக்கொண்டு இருக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆயிரத்தை கடந்ததுள்ளது.இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,201,443 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில், 246,383 பேர் குணமடைந்தனர். மேலும் 42,288 பேர் கவலைக்கிடமான நிலையில் தற்போதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வூஹானில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதிலும் குறிப்பாக குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 15,362 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,632- ஆக உயர்ந்துள்ளது.இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 681 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:
ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,947 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126,168-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 6,969 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,452 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311,357 -ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,048 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 34,196 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:
ரான்சில் 89,953 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,560 அதிகரித்துள்ளது. பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,053 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 213 பேர் குணமடைந்தனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தமிழ் நாட்டில் இதுவரை 7 பேர் குணமடைந்தனர்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…