தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. கொரோனவால் இதுவரை இந்தியாவில் 873 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த பரவலை கட்டுப்படுத்த மருத்துவ துறை, காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். இதில் ஊரக உள்ளாட்சி பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே அமைச்சர் வேலுமணி அவர்கள் அறிவித்த துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கோவையில் நடந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் சிரமமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…