துப்புரவு தொழிலளர்களுக்கு அறிவித்த இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும்…அமைச்சர் வேலுமணி அறிவிப்பு…

Published by
Kaliraj

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவி வருவதால், தமிழக  அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருகிறது. இந்த கொடிய  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 21 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  தமிழகம் மிகப்பெரிய பொருளாதார  இழப்பை சந்தித்துள்ளது. கொரோனவால் இதுவரை இந்தியாவில் 873 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இந்த பரவலை கட்டுப்படுத்த மருத்துவ துறை, காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். இதில் ஊரக உள்ளாட்சி பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே அமைச்சர் வேலுமணி அவர்கள் அறிவித்த துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கோவையில் நடந்த அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு  கூறியுள்ளார். மேலும் கூறிய அவர்,  பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் எளிதில் சிரமமின்றி  கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும்,  மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில்  போர்க்கால அடிப்படையில் நடைபெற்று  வருகிறது என்று  அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

வெற்றியின் பக்கம் திரும்புமா சென்னை அணி? தோனி இன்று என்ன செய்ய காத்திருக்காரோ!

சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…

18 minutes ago

சிலிண்டர் விலை உயர்வு அமலுக்கு வந்தது.., இனி எவ்வளவு தெரியுமா? மத்திய அரசு அதிரடி…

சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…

41 minutes ago

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

8 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

10 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

11 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

12 hours ago