பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்… மீட்க இந்திய அரசிற்க்கு கோரிக்கை…

Published by
Kaliraj

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய அரசு 144 தடைஉத்தரவு பிறப்ப்பித்துள்ளது. இதேபோல்,  ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம்  பயணிகள் வர மத்திய அரசு தற்போது  தடை விதித்தது. இந்நிலையில்,  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயர் கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில்  கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பிலிப்பைன்ஸில் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளதால், இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக பிலிப்பைன்ஸில் இருந்து இந்தியா புறப்பட்ட நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் மணிலா விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  விமான நிலையத்திலேயே முடங்கி கிடப்பதாகவும், தங்களை தாயகம் மீட்டுச் செல்ல இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

5 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

6 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

7 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

9 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

10 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

10 hours ago