கோரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் வகையில் மக்களுக்கு பல்வேறு துறைகள் சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சுகாதாரத்துறை சார்பில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோர் ஒரு மீட்டர் இடைவெளியில் நிற்கும் வகையில் கோடுகள் போடப்பட்டுள்ளன. அந்த கோடுகளுக்குள் வரிசையில் நின்று பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும், கோரோனா பரவுவதை தடுக்கும் வகையில், அவசர சிகிச்சை, தொடர் காய்ச்சல் மற்றும் தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும். மருத்துவமனைக்கு உள்ளே வரும்போதும், வெளியே செல்லும்போதும், கைகளை கிருமி நாசினி போட்டு கை கழுவ வேண்டும்.தேவைப்படும் பட்சத்தில்தான் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும். குழந்தைகளை சாலை, தெருக்களில் விளையாடுவதைத் தவிர்க்கவேண்டும். கரோனா வைரஸ் அறிகுறி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைத்து, அங்கு, வென்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…