கொரோனோ நிவாரணமாக குடும்ப அட்டைகளுக்கு 15,000 வழங்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுத்தாக்கள் அவசரவழக்காக ஏற்க மறுப்பு…

Published by
Kaliraj

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000  நிவாரணம் வழங்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்  ரமேஷ் உமாபதி என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கொரோனா வைரஸ் பரவாமலிருக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால் மக்கள் தாங்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர்கள் குறிப்பாக கூலிதொழிலாளர்கள் இந்த தடைய்யால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மக்களின் வருமான இழப்பை ஈடுகட்டவும், வாழ்வாதாரத்திற்காகவும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்  மாதம் 15 ஆயிரம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  மேலும், கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்ள கிருமி நாசினி மற்றும் சோப்புக்கட்டிகளை நேரடியாக வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத  நிலையில், நீதிபதிகள் திரு. ஆர்.சுப்பையா, திரு.  பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள்  ஆஜராகி, இந்த வழக்கை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் திரு. அர்விந்த் பாண்டியன் அவர்கள் ஆஜராகி, கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். இதைனையடுத்து, இந்த  மனுவை அவசர வழக்காக விசாரிக்க  மறுத்த நீதிபதிகள், வழக்கமான நடைமுறைப்படி பட்டியலிடப்பட்டால் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Recent Posts

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

3 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

3 hours ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

9 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

20 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

1 day ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

1 day ago