கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 2323 ஆக உயந்தது. தமிழகத்தில்,கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. சமீபத்தில் ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்.
கொரோனாவால் கரூரில் 42 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் வரை 41 பேர் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, மீதம் இருந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்நிலையில்,இன்று சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி கரூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் கடந்த 24-ம் தேதி சென்னையில் இருந்து கரூர் வந்துள்ளார். தற்போது அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…