கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கரூரில் மீண்டும் தொற்று .!

Default Image

கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 161 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 2323 ஆக உயந்தது. தமிழகத்தில்,கொரோனா பாதிப்பே ஏற்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. சமீபத்தில் ஈரோடு,  நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்.

கொரோனாவால் கரூரில் 42 பேர்  பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் வரை 41 பேர் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, மீதம் இருந்த ஒருவரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியதால் கரூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்நிலையில்,இன்று  சென்னை ராயபுரத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி கரூரைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நபர் கடந்த 24-ம் தேதி சென்னையில் இருந்து கரூர் வந்துள்ளார். தற்போது அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 0902 2025
TVK Leader vijay - Arani harish
Varun Chakaravarthy INDvENG
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win