ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 35 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். மேலும், வெளிமாநிலங்களை சேர்ந்த 1,500 பேருக்கும் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த 3,267 பேருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் வடமாநில தொழிலாளர்களை சிறப்பு இரயில் மூலம் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மீதம் 69 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…