இன்று (மார்ச்.,22 ) இந்தியா முழுவதும் சரியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட அதாவது 14 மணி நேரம் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 ஆவது வாரத்தில் கொரோனா 3 ஆவது நிலையை அடைவதிலிருந்து தடுக்க இன்று சுய ஊடரங்கு கடைபிடிக்கப்படுகிறது.. அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் உள்ள கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது. அது போல் மெட்ரோ ரயில் பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது. விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
என்ற போதிலும் அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள் போன்றவை இன்று திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.அதே போல் பள்ளி, கல்லூரிகள், மால்கள், தியேட்டர்கள், கோயில்கள், சுற்றுலா தலங்கள் போன்றவைகளும் மார்ச்., 31ஆம் தேதி வரை மூடப்பட்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது.அதன் ஒரு பகுதியா அனைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் அரிதாகி உள்ளது.இதே போல் சென்னையில் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டுவிட்டது.பொதுமக்களும் பொறுப்போடு இந்த சுய ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.இதனால் எங்கும் காணப்படும் மக்களின் நடமாட்டம் இன்றி சாலைகளும் பிற இடங்களும் அமைதியாக காணப்படுகிறது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…