தீவன தட்டுப்பாடு பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்-அச்சத்தில் விவசாயிகள் சங்கம்

Published by
kavitha

கால்நடை தீவன தட்டுப்பாட்டால் நகரங்களில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் அச்சம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனங்கள் குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கா தவறினால், தடையுத்தரவு காலத்தில் நகர பகுதிகளுக்கு பால் தட்டுப்பாடு அதிகரிக்கும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர்  அச்சம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறுகையில் தருமபுரி ஆவின் ஒன்றியத்தில் சராசரியாக  1.5 லட்சம் லிட்டர் பால் நாள் ஒன்றுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கோடையில் தீவன பற்றாக்குறை ஏற்படும் அத்தகைய ஓரிரு மாதங்கள் இயல்பாகவே பால் வரத்து ஆனது பாதிக்கும். அத்தகைய காலங்களில் விவசாயிகள் தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் ஆகியவற்றை கால்நடைகளுக்கு கூடுதல் ஊக்கமாக கொடுப்பர். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் அரசு பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவு அமலில் இருப்பதால் தவிடு உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுவது மட்டுமன்றி போலீஸ் நெருக்கடியும்  ஏற்பட்டுள்ளது. தற்போது கோடை காலமாக இருக்கிறது. இந்த காலத்தில் இயல்பாகவே குறையும் பால் உற்பத்தி தற்போது ஏற்பட்டுள்ள தீவன தட்டுப்பாட்டால் இது மேலும் குறைந்து விடும். கடந்த சில நாட்களாக தருமபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் மட்டுமே  கொள்முதல் செய்யப்படுகீறது தடையுத்தரவால் வீடுகளிலேயே அனைவரும் இருந்து வரும் சூழ்நிலையில் நகரங்களில் பாலுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், பால் உற்பத்தியானது  படிப்படியாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு  இன்னும் 15 நாட்களுக்கும் மேலாக தடை அமலில் இருக்கும் என்று தெரிகிறது. எனவே, தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் போன்ற கால்நடை தீவனங்களை, அவற்றின் உற்பத்தி பகுதிகளில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி எடுத்துச் செல்லவும், மேலும் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க  அரசு வழிவகைச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்களிலும் விவசாயிகள் இவ்வகை தீவனங்களை வாங்கிச் செல்ல போலீஸார் அனுமதிக்க வேண்டும். உரிய நேரத்தில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீதமுள்ள தடை காலத்தில் நகரங்களில் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அச்சத்தோடு எச்சரிக்கை  தெரிவித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

53 minutes ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

1 hour ago

KKR vs GT : வெற்றி பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? குஜராத்திற்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…

1 hour ago

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

4 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

4 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

5 hours ago