உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனாவை கண்டு வல்லரசு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர்.மேலும் தங்கள் நாட்டு மக்களை எல்லாம் கொரோனாவிற்கு பலி கொடுத்து வருகின்ற சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் இதன் பாதிப்பு உலகளவில் லட்சக்கணக்கில் உயர்ந்து உலக சுகாதார நிறுவனத்திற்கே கடும் சவால் விடும் வகையில் பரவி வருகிறது.இவ்வாறு வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 1,201,473 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 64,691 பேர் கொரோனாவால் உலகளவில் பலியாகி உள்ளனர்.
கொடூர கொரோனா பாதிப்பிற்கு அமெரிக்காவில் 311,357 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் அங்கு 8,452 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று ஒரே நாளில் 1000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே போல் ஈரானில் 55,743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3452 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இத்தொற்றுக்கு 81,669 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3329 பேர் பலியாகி உள்ளனர்.தற்போது சீனாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.யுனைட்டட் கிங்டத்தில் இத்தொற்றுக்கு 41,903 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 4313 பேர் பலியாகி உள்ளனர்.
இதே போல் துருக்கியில் வைரஸ் தொற்றுக்கு 23,934 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 501 பேர் பலியாகி உள்ளனர். சுவிஸ் நாட்டில் இத்தொற்றுக்கு 20,505 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 666 பேர் பலியாகி உள்ளனர்.ஸ்பெயினில் வைரஸ் தொற்றால் 126,168பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 11947 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…