ஊர்காவல்படை வீரரை தாக்கிய வாலிபர்களுக்கு கொரோனா பரிசோதனை.!

Default Image

ஊர்காவல்படை வீரரை தாக்கிய மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி சிக்னலில் நேற்று இரவு 8 மணிக்கு, நுாறடிச் சாலையில் இருந்து கோரிமேடு நோக்கி ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் சென்றனர். அப்போது, சாலையோரம் நடந்து சென்ற இளம்பெண்ணிடம்  3 வாலிபர்களும் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், அப்பெண் கூச்சல் சத்தம் கேட்டு பணியில் இருந்த ஊர்காவல்படை வீரர் நெல்சன், அந்த வாலிபர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர்கள் நெல்சனை தாக்கி விட்டு தப்பியோட முயற்சித்தனர். அப்போது போலீசாரும், பொதுமக்களும் வாலிபர்களை சபிடித்தனர். பிடிபட்ட மூவர் மீதும் பல வழக்குகள் உள்ளது. பிடிபட்ட வாலிபர்கள் கோரிமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து, போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து கொரோனா பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son