மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டரை தாக்கிய கொரோனா!

Default Image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம், தற்பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து வெளியில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இவர் வெளிநாட்டுக்கு சென்று வந்ததை மறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கோயிலுக்கு வந்த பக்தர்கள் குடும்பத்தினர் அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்