தமிழகத்தில் இன்றும் மேலும் 121 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,937 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 1,128 பேர் வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் இன்று சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 30,692 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 47 பேர் இருக்கின்றனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 6,850 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 93,189 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 2,058 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனா வார்டில் 908 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 12 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. அதில், பெண் குழந்தைகள் எண்ணிக்கை 56 ஆகவும், ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 65 ஆகவும் உள்ளது. இதையயடுத்து 13 லிருந்து 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,697 பேரும், 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் எண்ணிக்கை 240 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…