தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.
தமிழகத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் 1,596 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்றும் மட்டும் 27 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 15 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து வீட்டு கண்காணிப்பில் 23,760 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 155 பேர் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 87,159 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டுமே 5,978 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 59,023 பேரின் மாதிரிகள் பரிசோதனை உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் 1,629 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 946 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் ஐசோலேசன் வார்டியில் 1,878 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…