சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் இருவருக்கு கொரோனா!

Default Image

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு கர்ப்பிணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் வீரியம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது பல கர்ப்பிணிகள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் சென்னை எழும்பூர் மருத்துவமனையில் உள்ள தாய் செய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையிலுள்ள ஒரு கட்டடம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 8 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்படும் எனவும். கர்ப்பிணிகளுக்கு எளிதில் பரவுவதால் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்