இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்த எண்ணிக்கை 4829 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 31 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 4,829 பேரில் 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. கொரோனா பரிசோதனை அதிகரிப்பதால் பாதிப்பும் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று ஒரு நாளில் 13,413 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இன்று சென்னைக்கு அடுத்து அரியலூரில் 188 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 222 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…