முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Default Image

முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 52,334 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 625 பேர்  உயிரிழந்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய, முதுநிலை தனி செயலர் தாமோதரன் அவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது முதல்வர் அலுவலக துணை செயலர், 2 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுனர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்