கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை..!

Default Image

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்தது நேற்று ஒரே நாளில் 32 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 996 ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்பொழுது சென்னையில் 23,581 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையை மண்டல வாரியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது, அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,586 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அண்ணாநகரில் 2,431 பேர், ராயபுரத்தில் 2,297 பேர், தேனாம்பேட்டை- 1,130 பேர் மேலும் தண்டையார்பேட்டை – 1,984 பேர், திருவிக நகர்- 1,891பேர், வளசரவாக்கம்- 1,228 பேர் மாதவரம் -959 பேருக்கும் திருவொற்றியூர் 1,187 பெருக்கும், மணலி 530 பெருகும் அம்பத்தூர் 1,288 பேருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்