கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.இந்த பரிசோதனையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரை சேர்ந்த பொன்னுசாமி (46) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஈஷா அனிபாவுக்கு(3) என்ற குழந்தைக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது .
இதையெடுத்து 2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு வார்டில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. முடிவு வந்த பிறகு தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா..? இல்லையா…? தெரியும் என சிறப்பு மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…