தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை – முதல்வர்

Default Image

தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது – முதல்வர் பழனிசாமி

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிலேயே சிறப்பான முறையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் நடைபெறுகின்றன. தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13,000 கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று கூறியுள்ளார். பொதுமக்கள் அரசிற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த அளவிற்கு நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றார். ஏற்கெனவே தமிழக்தில் நிறைய தளர்வு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். ஊரடங்கை முழுமையாக தளர்த்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இதையடுத்து, மத்திய அரசிடமிருந்து கேட்ட அளவிற்கு தமிழகத்திற்கு நிதி கிடைக்கவில்லை. நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலத்திற்கான ஜிஎஸ்டி நிதியை மத்திய அரசு படிப்படியாக வழங்கி வருகிறது. மாநில வளர்ச்சிப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படாது சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 15 மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து விடைத்தாளும் திருத்தப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK
mk stalin