கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

Default Image

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனவால் மேலும்  3 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை சுகாதார துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

54 வயதாகும் அவர், மதுரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், போன்ற நோய்கள் இருந்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனவால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியளவில் கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 0902 2025
TVK Leader vijay - Arani harish
Varun Chakaravarthy INDvENG
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win