ராயபுரத்தில் 4ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு..!

Default Image

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,859பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில், 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,10,954 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 10,982 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 3,859 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen