தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை.
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர்ந்து ஒரு நாள் பாதிப்பு 800-ஐ தாண்டி வருகிறது. கடந்த ஆண்டை போல் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு நடவடிககைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு விதமான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதில், வங்கிகள், பள்ளிகளிலும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலங்கள், திருமண மண்டபம்கள், சுற்றுலா தலங்களை அரசுத்துறைகள் கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மக்கள் கூடும் இடங்கள், பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்களில் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும். காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கடந்த ஆண்டைப்போல் கண்காணிக்க வேண்டும். முககவசம் இன்றி குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்றதே கொரோனா மீண்டும் அதிகரிக்க காரணம் என தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…